Saturday, July 28, 2012

இந்தியா வெற்றி * காம்பிர் அசத்தல் சதம் *


:இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய கவுதம் காம்பிர் சதம் அடித்து கைகொடுத்தார். சொந்த மண்ணில் பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி, நேற்று

Tuesday, July 24, 2012

சுருண்டது இந்திய அணி * இலங்கை முதல் வெற்றி


இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 138 ரன்னுக்கு "ஆல் அவுட்' ஆனது. இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. 
இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, அம்பாந்தோட்டை மைதானத்தில் நடக்கிறது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் (15), இம்முறை நிலைக்கவில்லை. 
அடுத்து வந்த விராத் கோஹ்லி (1), ரெய்னா (1) ஏமாற்றினர். ரோகித் சர்மா "டக்' அவுட்டானார். தோனியும் (11) கைவிட்டார். இர்பான் 6, அஷ்வின் 21 ரன்கள் எடுத்தனர். கடைசி வரை போராடிய காம்பிர், 65 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 33.3 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் பெரேரா, மாத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 
எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தில்ஷன் (50), தரங்கா (59) கைகொடுக்க, 19.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Monday, July 23, 2012

விராத் விளாசல் தொடருமா?


 இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. முதல் போட்டியில் சதம் விளாசிய விராத் கோஹ்லி, மீண்டும் அசத்தும்பட்சத்தில், இந்திய அணியின் வெற்றிநடை தொடரலாம்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்

Saturday, July 21, 2012

இந்தியா வெற்றி


இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜொலித்த விராத் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். சங்ககராவின் போராட்டம் வீணானது. 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, அம்பாந்தோட்டையில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். 
சேவக் அபாரம்:
நீண்ட ஓய்வுக்குப் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர் காம்பிர், 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். சேவக்குடன் விராத் கோஹ்லி இணைந்தார். இவர்கள் ஒன்றும், இரண்டுமாக சேர்த்து, அணியின் ஸ்கோரை