Monday, December 6, 2010

பீட்டர்சன் இரட்டைசதம் (213*); இங்கிலாந்து 551/4





இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் பீட்டர்சன்.
அடிலெய்டு, டிச.5:  ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 551 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை துவங்கிய இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. குக் 136 ரன்களுடனும், பீட்டர்சன் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ûஸ தொடர்ந்தது. குக் 148 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 18 பவுண்டரிகள் அடங்கும். ÷
குக் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து காலிங்வுட் களம்புகுந்தார். மறுமுனையில் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 158 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.
இங்கிலாந்து வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் பாண்டிங் தொடர்ந்து ஈடுபட்டார். அவர் பௌலர்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டேயிருந்தார். இருப்பினும் அவருடைய முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
பீட்டர்சன்-காலிங்வுட் ஜோடி விரைவாகவும், அதேசமயம் விக்கெட் விழாமலும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. அணியின் ஸ்கோர் 452 ரன்களை எட்டியபோது காலிங்வுட், வாட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 70 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இயன்பெல் பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். பீட்டர்சன் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 133-வது ஓவரில் பீட்டர்சன் இரட்டை சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் பீட்டர்சன் அடித்த இரண்டாவது இரட்டைச்சதம் இதுவாகும். பீட்டர்சனின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரும் 500 ரன்களை கடந்தது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 551 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர்சன் 213 ரன்களுடனும், இயான் பெல் 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
கடந்த டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சிடிலுக்கு இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. அவர் 26 ஓவர்களை வீசி 100 ரன்களை வாரி இறைத்தார். இதேபோல் பொலிங்கர் 27 ஓவர்களில் 121 ரன்களையும், டோஹெர்ட்டி 24 ஓவர்களில் 120 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை விட 306 ரன்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. மேலும் 100 ரன்கள் சேர்த்துவிட்டு இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இரண்டு நாள் ஆட்டமே மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றிபெற முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தோல்வியையோ அல்லது இன்னிங்ஸ் தோல்வியையோ தவிர்க்க கடுமையாகப் போராடும். இருப்பினும் இங்கிலாந்து பௌலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 245 (ஹசி 93, ஹாடின் 56, வாட்சன் 51, ஆண்டர்சன் 4வி/51), இங்கிலாந்து -551/4 (பீட்டர்சன் 213*, குக் 148, டிராட் 78, காலிங்வுட் 42, இயான் பெல் 41*, ஹாரிஸ் 2வி/84).
(dinamani)

Sunday, December 5, 2010

தப்புமா கொச்சி அணி *இன்று முக்கிய முடிவு


கொச்சி ஐ.பி.எல்., அணியின் தலைவிதி இன்று நிர்ணயிக்கப்பட உள்ளது. இன்று மும்பையில் நடக்க உள்ள ஐ.பி.எல்., ஆட்சிக் குழு கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 
கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.பி.எல்., அணிகள் ஏலத்தில் புனே (ரூ.1702 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 1533 கோடி) அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இந்த இரு அணிகளும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில் புதிதாக பங்கேற்க விருந்தன. இந்நிலையில் கொச்சி அணி, பங்குதாரர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இப்பிரச்øனையை முடிக்க, ஐ.பி.எல்., நிர்வாகம் காலக்கெடு கொடுத்திருந்தது. 
சுமூக முடிவு:
கொச்சி அணியின் பங்குகளில், ஆங்கர் எர்த், பரினி டெவலபர்ஸ், ரோசி புளூ மற்றும் பிலிப் வேவ் ஆகியவற்றுக்கு 74 சதவீத பங்குகள் உள்ளன. மீதி உள்ள 26 சதவீத பங்குகள் ரெண்டஸ்வாஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு நிறுவனத்திடம் இருந்தது. ஏலத்தின் போது இந்நிறுவனம் வெற்றிக்கு உதவியதன் காரணமாக, இப்பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனால் மற்ற பங்குதாரர்களுக்கு, இதில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனால் பங்குகளை விற்கப் போவதாக அறிவித்தனர். இதனால் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 10 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொள்வதாக ரெண்டஸ்வாஸ் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இது ஐ.பி.எல்., நிர்வாகத்திடமும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று நடக்க உள்ள ஆட்சிக் குழு கூட்டத்தில் கொச்சி அணிக்கு எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சியான கிரிக்கெட் வீரர் தோனி: முஷாரப்


 "" உலகின் கவர்ச்சியான கிரிக்கெட் வீரர், இந்திய கேப்டன் தோனி,'' என வர்ணித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப். 
இது குறித்து அவர் கூறியது: உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் இந்தியாவின் சச்சின். அதே சமயம் உலகின் கவர்ச்சிகரமான மற்றும் உற்சாகமான கிரிக்கெட் வீரர் தோனி. ஒரு முறை அவரது நீளமான தலைமுடி குறித்து, அவரை பாராட்டினேன். தற்போது அவர் தலைமுடியை "கட்' செய்து குறைத்துக் கொண்டுள்ளார். ஆனால் தற்போதும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவே உள்ளார். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி, ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலைமை, மனவேதனை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னைகள், பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஆட்டிப் படைத்து வருகின்றன. இதிலிருந்து விரைவில் மீள வேண்டும். இவ்வாறு முஷாரப் தெரிவித்தார். 

தொடரை வென்றது இந்தியா *காம்பிர் மீண்டும் சதம்






காம்பிர் மீண்டும் சதம் அடித்து அசத்த, நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்தியா.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. "டாஸ்' ஜெயித்த இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த், ரெய்னாவுக்குப் பதில் ஜாகிர் கான் மற்றும் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஜேமி ஹவ், சவுத்தி நீக்கப்பட்டு, பிரண்டன் மெக்கலம், பிராங்க்ளின் இடம் பெற்றனர்.
மெக்கலம் ஏமாற்றம்:
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் துவக்கம் தந்தனர். முதல் ஓவரை ஜாகிர் வீசினார். இவர் வீசிய ஆட்டத்தின் 2 வது பந்திலேயே, டக்-அவுட்டாகி வெளியேறினார் மெக்கலம். வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்டிய கப்டில் (12), காம்பிரின் துல்லிய "த்ரோவில்' ரன் அவுட்டானர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஸ் டெய்லர் (4) சொதப்பினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த வில்லியம்சன் (21), ஸ்டைரிஸ் (22) ஓரளவு ரன்கள் சேர்த்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் கேப்டன் வெட்டோரி (3), ஹாப்கின்ஸ் (6) சோபிக்க வில்லை. நியூசிலாந்து அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பிராங்க்ளின் ஆறுதல்: 
பின்னர் பிராங்க்ளின், மெக்கலம் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராங்க்ளின், ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் முதல் அரை சதம் கடந்தார். இவருக்கு நாதன் மெக்கலம் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. இந்த ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், நாதன் மெக்கலம் அவுட்டானார். இவர் 43 ரன்கள் (4 பவுண்டரி) சேர்த்தார். பின்வரிசையில் மில்ஸ்15 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 224 ரன்கள் சேர்த்தது. 72 ரன்களுடன் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராங்க்ளின் அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா தரப்பில் ஜாகிர், அஷ்வின், யூசுப் பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் மிரட்டல்: 
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர் அதிரடி துவக்கம் தந்தார். சேவக் இல்லாத குறையை நீக்கிய இவர், மெக்கே பந்து வீச்சில் "ஹாட்ரிக் பவுண்டரி' அடித்து அசத்தினார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த காம்பிர், 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இவருடன் இணைந்த முரளி விஜய் வழக்கம் போல, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் (30) அவுட்டானார்.
மீண்டும் சதம்: 
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது போட்டியில் (ஜெய்ப்பூர்) சதம் அடித்து அசத்திய காம்பிர், நேற்றும் சதம் கடந்தார். இது ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 9 வது சதமாக அமைந்தது. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த விராத் கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 10 வது அரை சதம் கடந்தார். மெக்கே பந்து வீச்சில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கோஹ்லி. 39.3 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி, 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் 126 (16 பவுண்டரி) விராத் கோஹ்லி 63 (6 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை தன்வசப்படுத்தியது இந்தியா. இவ்விரு அணிகள் மோதும் 4 வது போட்டி, வரும் 7 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது.

பாக்ஸ் செய்திகள்:
பாதிப்பு இல்லை
வதோதரா போட்டியில் சதம் அடித்தது குறித்து இந்திய கேப்டன் காம்பிர் கூறியது: ஒரு கேப்டனாக முதல் தொடரிலேயே வெற்றி பெற்றது, மகிழ்ச்சியான விஷயம். நேற்றைய போட்டியில் அடித்த சதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நான் அடித்த சதம், தொடரை கைப்பற்ற உதவியுள்ளது. கேப்டன் பொறுப்பு எனது ஆட்டத்திறனை எந்த விதத்திலும் பாதிக்காது. இதனால் வழக்கம் போல எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 5-0 என வெல்வோம். இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.

8 வது வீரர்
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் (138 ரன்) மற்றும் வதோதரா (126 ரன்) போட்டிகளில் சதம் அடித்துள்ளார் இந்திய கேப்டன் காம்பிர். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த 8 வது கேப்டன் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ரிக்கி பாண்டிங் (2 முறை), மகிலா ஜெயவர்தனா, சனத் ஜெயசூர்யா, சவுரவ் கங்குலி, கிறிஸ் கெய்ல், கிரீம் ஸ்மித், ஆலன் பார்டர் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

சூப்பர் ஜோடி
நேற்றைய போட்டியில், நியூசிலாந்தின் நாதன் மெக்கலம், ஜேம்ஸ் பிராங்க்ளின் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 8வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து ஜோடி என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 2001ல் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, டியான் நாஷ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்திருந்தது.

ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில் -ரன் அவுட் (காம்பிர்)-    12 (15)
பிரண்டன் மெக்கலம் (கே) விஜய் (ப) ஜாகிர்    0 (1)
வில்லியம்சன் எல்.பி.டபிள்யு., (ப) முனாப்    21 (50)
டெய்லர் (கே) சகா (ப) ஜாகிர்    4 (16)
ஸ்டைரிஸ் (கே) யுவராஜ் (ப) அஷ்வின்    22 (35)
பிராங்க்ளின் -அவுட் இல்லை-    72 (108)
வெட்டோரி (கே) யுவராஜ் (ப) யூசுப்    3 (7)
ஹாப்கின்ஸ் (கே) யுவராஜ் (ப) யூசுப்    6 (6)
நாதன் மெக்கலம் (கே) காம்பிர் (ப) அஷ்வின்    43 (53)
மில்ஸ் -ரன் அவுட் (சகா)-    15 (9)
உதிரிகள்    26
மொத்தம்    (50 ஓவரில் 9 விக்., இழப்பு)    224
விக்கெட் வீழ்ச்சி: 1-2 (பிரண்டன் மெக்கலம்), 2-19 (கப்டில்), 3-34 (டெய்லர்), 4-49 (வில்லியம்சன்), 5-77 (ஸ்டைரிஸ்), 6-96 (வெட்டோரி), 7-106 (ஹாப்கின்ஸ்), 8-200 (நாதன் மெக்கலம்), 9-224 (மில்ஸ்).
பந்து வீச்சு: ஜாகிர் 8-2-31-2, நெஹ்ரா 8-1-38-0, முனாப் 10-0-28-1, அஷ்வின் 9-1-49-2, யூசுப் 8-0-27-2, ரவிந்திர ஜடேஜா 7-0-40-0.
இந்தியா
முரளி விஜய் -ரன் அவுட் (வெட்டோரி)-    30 (50)
காம்பிர் -அவுட் இல்லை-    126 (117)
கோஹ்லி -அவுட் இல்லை-    63 (70)
உதிரிகள்    10
மொத்தம்    (39.3 ஓவரில் 1 விக்., இழப்பு)    229
விக்கெட் வீழ்ச்சி: 1-115 (முரளி விஜய்).
பந்து வீச்சு: மில்ஸ் 6-0-39-0, மெக்கே 6.3-0-42-0, பிராங்க்ளின் 4-0-34-0, வெட்டோரி 9-0-41-0, நாதன் மெக்கலம் 8-0-36-0, ஸ்டைரிஸ் 6-0-32-0.(dinamalar)